சொந்த மொழியில் எழுத
சொற்கள் தேடி அலைந்தோம்.
தர வேண்டிய கருத்தை
தட்டச்சில் தர தங்லீஷ்.
தாய் மொழியாம் தமிழ்மொழியை
தங்லீஷ் என்று
ஆங்கில மொழியில் அடைத்தோம்.
உலகில் சொல்லாத சொல்லெடுத்து
சுவையும், கருத்தும் கூட்டி
தனித்து நின்ற தமிழ்மொழி தந்த
பல கருத்து புத்தகம் காணாமல் போக.
தங்லீஷ் தலையில் கொண்டு
கண்டெடுத்த மீதி தமிழ் புத்தகத்தை
காணாமலே நாங்கள் போவேம்.
அடிமையை நாட்டில் கண்டு
நானிலம் மெச்ச
விடுதலை வாங்கிய வீரர்களே.
வரம் வேண்டி காத்திருங்கள்.
தமிழ் மொழியை அடிமையாக்கிடுவோம்.
விடுதலை வேட்கையோடு,
விரைவில் வர வேண்டும்,
தமிழை விடுவிக்க.
வர வேண்டிய காலம் வரும்.
வரம் வேண்டி காத்திருங்கள்.
தமிழ் மொழியை அடிமையாக்கிடுவோம்.
0 comments:
Post a Comment