நிகழாத நிகழ்ச்சி:-



கிராமத்து கிழவன் கேட்டான்:

ஆங்காங்கே ஆள் எடுப்பு
அனு குண்டு முட்டை அடை காக்க
ஆயிரம், ஆயிரம் செலவு
வராத போருக்கு வாரி இறைத்த வள்ளல்கள்
வாய்க்கரிசிக்கு வழி இல்லை
வாய்கால் தண்ணிக்கு வரதில்லை
இராணுவ பேரன் சொன்னான்:

அடைகாப்பது முட்டை பொறியாது இருக்கத்தான்
போருடை தரித்தேம், போரை தடுக்கத்தான்
நிகழகூடாத நிகழ்ச்சிக்குத்தான்
நித்தமும் செலவு

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes