அழைப்பு:-


இருட்டுக் கோட்டைக்கு
இன்பமாய் அழைத்தது யார்?
உண்ணாத வாய்க்கும்,
விழிக்காத விழிக்கும்,
பத்து மாதம் அன்புடன் அழைத்தது யார்?
வெளிவருகையில் பஞ்ஞபூதங்களின்
பக்குவ அழைப்பு.
காற்றின் தொடுத்லில்,நீரின் தழுவலில்
நிம்மதியுடன் அழைத்தது யார்?
அமுதகலசத்தில் அனைய அழைத்தது யார
அரைஞ்சான் நாக்கை
சுழற்ற அழைத்தது யார்?
தெரியாத அழைப்பிற்கு
புரிந்தே இசைந்தாய்.
தெரிந்தே அழைக்கிறேன்.
தேர்ந்த நட்பில், சேர்ந்தே வாழ்ந்திட.
சுழற்றிய நாக்கின் சொற்குவியலில்
உண்மை நட்பிற்கு உண்ணத அழப்பு.
உலகில் நிலைத்திடும் பாடலில் எல்லாம்
உன்னையும் சேர்த்திட அழய்த்திட்டேன்
அருமை தோழா, அழைத்ததும் வாடா..
அருமை தோழா, அழைத்ததும் வாடா

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes