நட்பெனும் நந்தவனத்தில்.
நான் கொண்ட செந்தமணைத்தில்ஓடிடும் மணி தெரியாமல்
ஒன்றாய் உள்ளறிய வார்த்தைகள். இன்று வாடிக்கிடக்கிறது.
வாராய் தோழா,தொடாத மலர்களாய்.
துவண்டு விட்ட நம்மை இணைக்கும் பாலமாய்,
இனிய தேனியாய் வந்த அவனை
வார்த்தைகளில் கொன்றாயாமே.
வந்திடு நண்பா, வார்த்தைகளில் எனை கொன்றிடு நண்பா.
அதற்காக வேணும் கொடுத்து வைப்பேனா பார்ப்போம்.
நிணைவுகளை நீட்டித்து கொண்டிருக்கிறேன்.
பழகிய நாட்கள் பழங்கதை ஆகாமல்
பாதுகாக்க வந்திடு நண்பா.
பிரிந்ததாய் மற்றவர் சொல்ல உள்ளே தேடினேன்.
உறங்குவதாய் உணர்ந்தேன்
விழித்திட வேண்டுகிண்றேன்.
இணைந்திட இசைக்க வில்லை
எப்போது பிரிந்தோம் நாம்? இணைந்திட இசைக்க?
எவரும் சொல்லட்டும் பிரிந்ததாய்.நம்பிவிடாதே.