0

அருள்:-


குயிலுக்கு அருள் வந்தால் கூவும்
காக்கைக்கு அருள் வந்தால் கரையும்
மயிலுக்கு அருள் வந்தால்ஆடும்
மானுக்கு அருள் வந்தால் தாவும்
மனிதனுக்கு அருள் வந்தால் வேண்டாம்
அப்பாப்பா பல வழியில் அருள் வந்து விட்டது
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத !!!
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத ???
        ஏழை , பணக்காரன்
             பசி , பட்டினி
             கொலை , தற்கொலை
போதுமடாசமி மனித அருளில் விளைந்த அருள்
[நல்லவை பல நடந்து உள்ளது இல்லை என்று சொல்ல வில்லை]

0

நிஜம் எது:-


எடுத்து வைத்த அடிகளிலே
எறும்பின் காலடி சத்தத்தை
கச்சிதமாய் கேட்டிடுவேன்
பாவை வாயினில்
பக்குவமாய் சென்ற
மீனின் துடிப்பை
மீண்டும் உணர்ந்திடுவேன்
என்னுல் புகுந்த நீ
நிஜமா , நிழலா உணரமுடிய வில்லையே.
அருள்:-

இருளுக்கு அருள் கருப்பு
பகலுக்கு அருள் வெளுப்பு
நிலத்துக்கு அருள் விளைதல்
அருளுக்கு அருள் எழுதுதல்
உனக்கு அருள் சிலாகித்தல்
[அருள் என்பது ஆங்காங்கே கிடைப்பது அல்ல
ஒவ்வொரு மனிதன் உள்ளம் நினைப்பது]
0

அழைப்பு:-


இருட்டுக் கோட்டைக்கு
இன்பமாய் அழைத்தது யார்?
உண்ணாத வாய்க்கும்,
விழிக்காத விழிக்கும்,
பத்து மாதம் அன்புடன் அழைத்தது யார்?
வெளிவருகையில் பஞ்ஞபூதங்களின்
பக்குவ அழைப்பு.
காற்றின் தொடுத்லில்,நீரின் தழுவலில்
நிம்மதியுடன் அழைத்தது யார்?
அமுதகலசத்தில் அனைய அழைத்தது யார
அரைஞ்சான் நாக்கை
சுழற்ற அழைத்தது யார்?
தெரியாத அழைப்பிற்கு
புரிந்தே இசைந்தாய்.
தெரிந்தே அழைக்கிறேன்.
தேர்ந்த நட்பில், சேர்ந்தே வாழ்ந்திட.
சுழற்றிய நாக்கின் சொற்குவியலில்
உண்மை நட்பிற்கு உண்ணத அழப்பு.
உலகில் நிலைத்திடும் பாடலில் எல்லாம்
உன்னையும் சேர்த்திட அழய்த்திட்டேன்
அருமை தோழா, அழைத்ததும் வாடா..
அருமை தோழா, அழைத்ததும் வாடா
0

விழிகள் காத்திடும்:-


விழியே விழித்திரு,
விட்டு சென்றவனை நினைத்து.
வீணாக கண்ணீர் விடுவதற்கல்ல,
விடிந்திடும் உன் பொழுதிற்கு.
விழாமல் உன் கணவை காத்திட
விழியே விழித்திரு.
வீழ்ந்த எண்ணத்தில்
தேய்ந்த நினையு தன்னை
தினம், தினம் விழிதன்னில் பதித்திடு.
மறுமுறை வீழாமயக்கத்தில் சாயாமல்
விழிகள் காத்திடும்.

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes