0

ஏக்கத்தின் பிரதி பலிப்பு:-

குருதியணு சக்தி இழந்து
சம கால வேலைகளைச் சடுதியாய்ச் செய்யாமல்,
சக்கரத்தில் சுற்றாத சற்று
நிலை குலைந்த இயந்திரம் போல்
செயல் தன்னில் தடுமாறும் மூளை...

உடல் சுமந்த ஆன்மா
எழுபத்தி இரண்டாயிரம் நாடி நரம்பெல்லாம்
பசி தன்னில் கதற.,
பெற்றவர், உற்றவர், வந்தவள், பிறந்தவள்
உளமதை உணராதோராய்
உதைத்திடும் தனிமை வேளை...

அறியாக் கூட்டத்தில் - நான்
அறியா மானுடனாம்
என் திறனை உணர்ந்து,
கல்வி கற்கா வேளையிலும்
எனக்களித்திட்ட கெளரவ பதவி தன்னை
பகர்வதற்கு வார்த்தையே இல்லை தோழி...

கற்பெனும் ஆண்மையை இழக்கவும் மனமின்றி,
பசியின் கொடுமைதனைப் பகரவும் வழியின்றி,
தகித்திடும் நெருப்பிலும்,
தனிமை நிலையிலும்,
நெறிதவறாது வாழ்ந்திட்டேன்.,
சதியில் வீழாது நிலைத்திட்டேன்...

சொல்தனை அம்பாக்கி,
மனந்தனைப் புண்ணாக்கி - என்
மனம் வதைத்தோரெல்லாம்
என் வெற்றியைக் காணும் நாளுக்காய்க்
காத்திருக்கின்றேன் தோழி...
----------------------------------------------
கவிதாயினி அருள்மொழி
0

பிறந்த நிமிடம்:-



பழகாத பாதையில்,
பக்குவமாய் வெளிவந்து,
பதறி துடித்திட்டேன்,
பாதுகாப்பு இல்லை என்று..

எனக்குள் இருக்கும் பயமால் - இது.
வாழ்வின் முடிவென்று என்ணி,
வாய் விட்டு கதறினேன்.,

பார்த்த அன்னை சிரித்தாள்,
ஆரம்பம் என்று...
----------------------------------------
கவிதாயினி அருள்மொழி

0

வேலை நேரதில் முகநூல்:-



கனத்த மூளையில்,
கரையானாய் அரிக்குதடி,
உன் நினைவு.
சொல்லில் சுவைஒழுக
வந்ததடி உன் பெயரே.
மனதில் மரம் கொத்தியாய்
கொத்துதடி உன் எண்ணம்.
அதனால் பயந்த பறவைபோல்
பறக்குதடி மற்ற எண்ணம்.
விரல்கள் விளையாட்டாய்
ஓடுதடி, உன்னிடம் பேச.
வேடிக்கை பார்த்த முதலாளி
வெந்து தனியிராரடி.
0

தவிக்கும் நட்பு:-





கனத்த நட்பின் இடையே.
புவிகாந்த புள்ளி போல்.
குண்டூசி முனை குத்துபோல்.
ஒரு சுரீர் இன்பம்.
சுருட்டி தவிக்க வைத்தது.
மனதையும்,உடலையும்.
சுதாரித்து நிமிரச்சொல்லி,
நட்பு நங்கென்று அடித்தது.
இருவரிடமும் நாணம்.
கனபொழுது ,காதலும்
அதன் நிணைவுகளும்.
கவணமாய் கொண்டு
சொல்லும் நட்பும்.
கடைசிவரை வேண்டும் என்ற
தவிப்பும் ,இருவரிடமும்
இணைந்தே இருந்தது.
கணத்த நட்பின் இடைய


About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes